
|
|

|
தொழிற்கல்வி
மேற்கிந்திய சமூகத்தை நோக்கி இந்தியாவினுடைய பொருளாதாரம், அறிவு, கல்வித்தரம், மக்கள் இயல் வளர்ச்சியடைந்து வருகிறது. தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் பல அறிவுசார்ந்த பணியாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள் போன்றவர்கள் தயாரிப்பின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளனர். அறிவுசார் பணியாளர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. அதனால் தரவு விவரபப்படி ஏற்கனவே உள்ள தேவையை அடையவில்லை. பணியாளர்கள் தேவை அதிகரித்துள்ளது. இப்போது இருக்கும் அமைப்புகளை எளிமையாக்கியும் மாற்றி அமைத்தும் விரிவுபடுத்தியும் எதிர்காலத்தில் மக்களுக்குக் கிடைக்க வழி செய்ய வேண்டும். தொழிற்கல்வியில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் அது எளிமையாக அமைய வேண்டும், மேலும் வளைந்து கொடுக்கும் தன்மை, பாதுகாப்பு, படைப்பாற்றல் முதலினவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும்.
தேசிய அறிவு ஆணையத்தின் கவனத்தில் உள்ள சில பிரச்சினைகள்:
- தற்போதைய நிர்வாக அமைப்பைப் பலப்படுத்துதல்
- சாதாரண மக்களின் தேவைக்கும் அவர்களின் திறமையை வளர்க்கவும் பொது மற்றும் தனியார் உறவு, கணினிப் பயிற்சி, தொலைதூரக்கல்வி போன்றவற்றின் தரத்தை உயர்த்தவும் ஒரு மாற்று அமைப்புத் தோவைப்படுகிறது.
- திறமையான தொழிலாளர்களின் தேவையைக் கவனத்தில் கொண்டு தொழிலாளர்களுக்குச் சிறந்த முறையில் சாதாரண மற்றும் அமைப்புச் சாரா பிரிவுகளில் பயிற்சி அளித்தல்
- கட்டமைப்பு மற்றும் காலவேலை ஒழுங்கு
- தொழிற் கல்வியில் உள்ள குறைகளை நீக்க தேசிய அளவிலான மறுபயிற்சி
|
|
|