
|
|

|
மேலாண்மைக் கல்வி
சமீப காலமாக நமது நாட்டில் தொழிற்கல்வி நிறுவனங்கள் கூடியுள்ளன. குறிப்பாக 1990ல் இருந்தே தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை கூடியுள்ளன. மாணவர்களுக்குப் படிக்க சிறந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வசதி உள்ளது. இந்தியாவில் வேளாண்மைக் கல்வியைப் பொறுத்தவரையில் 1200 நிறுவனங்கள் உள்ளன. இவைகள் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டபடிப்புப் படித்த பட்டதாரிகளைத் தொழிற்சாலைகள் வேலைக்கு அமர்த்துகின்றன. எனவே இந்தியாவின் கல்வித்திட்டம் மற்றும் தொழிற்கல்வி தொழிற்சாலைகளின் மாற்றத்திற்குப் பொருந்தமானதாக அமைய வேண்டும். தொழிலாளர்களின் தேவைக்கேற்ப மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் தரமான மேலாண்மைக் கல்வியை வழங்குகின்றதா என்பதை முடிவு செய்தல் அவசியமானதாகும். எனவே தனியார் மதிப்பீடு செய்தல் அவசியமானதாகும்.
தேசிய அறிவுசார் ஆணையத்தின் கவனத்தில் உள்ள சில பிரச்சினைகள்:
- வழிமுறை, நிர்வாகம், சட்டமைப்பு, கற்பித்தல், பாடத்திட்டம் தொடர்பான பிரச்சனைகளும் சவால்களும்
- சரியான அமைப்பு, தனியார் கொள்கைகள் மற்றும் மாநில அரசாங்கம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலைப் பலபடுத்தும் முறை
- திறமையானவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், கவர்ந்திருக்கவும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்
- மேலாண்மைக் கல்வி ஆராய்ச்சியை மேம்படுத்தலுக்கான அளவுகோள்கள்
- தன்னாட்சிப் பிரச்சனைகள் மற்றும் கணக்குக் கொடுக்கும் பொறுப்புள்ள நிர்வாகங்கள்
- புதுமையான முறைகளைக் கையாண்டு மேலாண்மைக் கல்வியைச் சிறந்த முறையிலே வளர்க்க வேண்டும். அது சமூகத்தில் பரந்துபட்ட முறையில் பயன்பாட்டில் உள்ளன.
|
|
|