
|
|

|
சட்டக் கல்வி
தற்போது சட்டக்கல்வி ஒரு வேலைவாய்ப்புக் கல்வியாகவும் உலகமயமாக்கலிலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சட்டக் கல்வி சமூகத்தின் அறிவைக் கூட்டுகிறது. மேலும் கல்வியைப் பயன்படுத்த உதவுகிறது. சட்டக்கல்வி அறிவு தொடர்பான கருத்துக்களை உருவாக்குவதிலும் அதனைச் சமூகத்தில் பயன்படுத்துவதற்கும் இடையே ஒரு இணைப்பாகச் செயல்படுகின்றது. இந்தியாவின் சட்டக்கல்வியைப் பொறுத்தவரையில் காலமறுபாட்டுடன் ஒத்துப் போகக்கூடிய ஒரு தொலைநோக்குப் பார்வை அவசியமாகக் கருதப்படுகிறது.
தேசிய அறிவுசார் ஆணையம் சட்ட வல்லுனர்களுடனும், கல்வியாளர்களுடனும் கலந்தாலோசித்தது. அதன் மூலம் கிடைக்கப்பெற்ற சில கருத்துக்கள்
- தரமான சட்டக்கல்வியைப் பெறுதல்
- திறமையானவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், கவர்ந்திருக்கவும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்
- கல்வித்திட்டத்தின் தொடர் வளர்ச்சிக்கு வழிகளைக் கண்டுபிடிப்பது
- நிர்வாக மற்றும் கட்டமைப்புக்கான புதிய தீர்வுகளைக் காணுதல்
- வழக்கமான அறிக்கைகள்
- உலக அளவில் போட்டியிடத்தக்க வகையில் தீவிரமான ஆராய்ச்சி மரபை வளர்த்தல்
- பல்வேறுபட்ட சமூக, பொருளாதார நிலைகளில் உள்ள மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு சட்டப் பயிற்சியை உருவாக்குதல்
|
|
|